ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்ட ஆதார்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ள காங்கிரஸ் 

நிதி மசோதாவாக ஆதார் ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.   

News image
Updated On :26 செப்டம்பர் 2018, 2:36 pm

புது தில்லி: நிதி மசோதாவாக ஆதார் ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.   

ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் திட்டம், ஆதார் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 31 மனுக்கள் தொடுக்கப்பட்டன. 

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட், அசோக் பூஷண் ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. 

இந்த விசாரணை கடந்த மே மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் புதனன்று  தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்டவிரோதம் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியுள்ளது.

அத்துடன் தனிநபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயமாக்கக் கூடாது, நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நிதி மசோதாவாக ஆதார் ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.   

தீர்ப்பு வெளியான பிறகு தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது அவர் கூறியதாவது:

இன்று வெளியாகியுள்ள தீர்ப்பில் தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்டவிரோதம் என்று கூறியதுடன், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை உச்ச நீதிமன்றம்  நீக்கியுள்ளதை வரவேற்கிறேன். 

அத்துடன் தீர்ப்பில் நிதி மசோதாவாக ஆதார் ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது அரசியலமைப்பு சட்டத்தில் நிகழ்ந்த ஒரு மோசடி என்று நீதிபதி டி.ஒய். சந்திராசூட் கூறியுள்ள கருத்தோடு ஒத்துப்போகிறோம். 

ஆதார் கண்டிப்பாக நிதி மசோதா ஆகாது என்பதால் உச்ச நீதிமன்றத்தில் ஏழு பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இதுதொடர்பாக மேல்முறையீடு செய்யவுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.