ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

4 நாட்களுக்கு ஒரு ரொட்டித் துண்டு: சகோதரனின் வீட்டில் இருந்து எலும்பும் தோலுமாக மீட்கப்பட்ட பெண்

சகோதரனின் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 50 வயது பெண்ணை, தில்லி மகளிர் ஆணையம் எலும்புக்கூடாக மீட்டுள்ளது அதிர்ச்சிளிக்கிறது.

News image
Updated On :19 செப்டம்பர் 2018, 7:10 am


புது தில்லி: சகோதரனின் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 50 வயது பெண்ணை, தில்லி மகளிர் ஆணையம் எலும்புக்கூடாக மீட்டுள்ளது அதிர்ச்சிளிக்கிறது.

தில்லி ரோஹினி பகுதியில், வீட்டின் மொட்டை மாடியில் அனாதையாக விடப்பட்ட இந்த பெண்ணுக்கு, 4 நாட்களுக்கு ஒரு முறை ஒரு துண்டு ரொட்டி மட்டும் உணவாக அளிக்கப்பட்டுள்ளது.

தலை முடிகள் காய்ந்து ஒட்டிப் போன நிலையில், எலும்பும் தோலுமாக இருந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது சொந்த சகோதரனால், வீட்டிலேயே சித்ரவதை செய்யப்பட்டு, பட்டினியாக விடப்பட்டுள்ளார் இந்த பெண். மிகவும் அவலமான நிலையில் அவளை மீட்ட தில்லி மகளிர் ஆணைய அதிகாரிகள், அவரால் பேசவோ, நடக்கவோ, மனிதர்களை அடையாளம் காணவோ முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சகோதரன் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

வெறும் 50 வயதான பெண்மணி, 2 ஆண்டுகள் பட்டினியோடு, பரிதாபகரமான நிலையில் விடப்பட்டதால், அவரைப் பார்க்க 90 வயது பாட்டி போலக் காணப்படுகிறார். 

இந்த சம்பவம் பற்றி அந்த பெண்ணின் மற்றொரு சகோதரர் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்ததை அடுத்து, அப்பெண் உடனடியாக மீட்கப்பட்டுள்ளார். மகளிர் ஆணைய அதிகாரிகள் பக்கத்து வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று அங்கிருந்து அந்த பெண் இருக்கும் மாடியில் குதித்து கடும் பிரயத்தனம் செய்தே அப்பெண் மீட்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க வேறு யாரையும் சகோதரர் அனுமதிக்காமல் மாடியிலேயே சிறைவைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.