2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நாங்கள் எப்படித் தேர்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கூற முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு  

நாங்கள் எப்படித் தேர்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கூற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனு ஒன்றில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:48 pm

ANI

புது தில்லி: நாங்கள் எப்படித் தேர்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கூற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனு ஒன்றில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

பாஜக ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் மத்திய பிரதேச வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறது. 

அதன் தொடர்ச்சியாக இரு மாநிலங்களிலும் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் இரு மாநில தேர்தல் ஆணையங்களுக்கும் உத்தரவிடுமாறும், வரும் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கைக்கும், வாக்கு ஒப்புகைச் சீட்டில் தெரிய வரும் எண்ணிக்கைக்கும் இடையே சரிபார்த்தல் நடைபெறுமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சரான கமல்நாத் கடந்த மாதம் 10-ஆம் தேதி மனுதாக்கல் செய்தார். 

இந்த மனு மீது விரிவான பதில்மனு தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் 101 பக்க பதில்மனு ஒன்றினை செவ்வாயன்று தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது        

கமல்நாத் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் இடைக்கால நிவாரணம் கோரியுள்ளதை நியாயப்படுத்தும் வகையில் எந்த விதமான வலுவான ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும். 

அத்துடன் நாங்கள் எந்த முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை காங்கிரஸ் கூற முடியாது  அதற்காக மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து எங்களது பணிகளில் தலையிட முடியாது. 

இவ்வாறு அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.