நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சிபிஐ விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை வரவேற்கும் அருண் ஜேட்லி

சிபிஐ விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு வழங்கியிருக்கும் அறிவுறுத்தல்களின் காரணமாக, விசாரணை விரைவாகவும், உண்மை சந்தேகத்துக்கு இடமின்றியும் வெளியாகும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:09 pm

ANI


புது தில்லி: சிபிஐ விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு வழங்கியிருக்கும் அறிவுறுத்தல்களின் காரணமாக, விசாரணை விரைவாகவும், உண்மை சந்தேகத்துக்கு இடமின்றியும் வெளியாகும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

சிபிஐ இயக்குநர்களின் புகார் மீது இரண்டு வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதன் வாயிலாக நியாயமான விசாரணை நடைபெறவும், உண்மை விவரம் வெளியாகவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்திருப்பதன் வெளிப்படையான உண்மை விவரம் வெளியாகும் என்றும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்காலிக இயக்குநர் நாகேஸ்வர ராவ், கொள்கை முடிவெடுக்க தடை விதித்திருப்பதோடு, மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐ, மத்திய அரசு மற்றும் மத்திய விசாரணை ஆணையம் உள்ளிட்டவற்றுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

விசாரணையை 2 வாரத்துக்குள் முடித்து அறிக்கை  தாக்கல் செய்யவும், விசாரணையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதியையும் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.