திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

செல்ஃபி மோகம் யாரை விட்டது.. மகாராஷ்டிர முதல்வரின் மனைவி செய்ததைப் பாருங்கள்

பாதுகாப்புத் தடைகளை மீறி, கப்பலின் நுனிப் பகுதியில் அமர்ந்து செல்ஃபி எடுத்த மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் மனைவியின் விடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 11:10 am


பாதுகாப்புத் தடைகளை மீறி, கப்பலின் நுனிப் பகுதியில் அமர்ந்து செல்ஃபி எடுத்த மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் மனைவியின் விடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முதல் உள்நாட்டு பயணிகள் கப்பலான ஆங்ரியாவில், பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை எல்லாம் மீறிய அம்ருதா பட்னவிஸ், கப்பலின் நுனிப் பகுதிக்குச் சென்று அமர்ந்து கொண்டு பல திசைகளில் செல்ஃபி எடுத்துத் தள்ளினார்.

இதில், அவருக்கு எந்த பதற்றமும் ஏற்படாமல் இருந்திருக்கலாம், ஆனால், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மிகுந்த பதற்றம் அடைந்தனர்.

அவரை அதட்டி உள்ளே வரச் சொல்லவும் முடியாமல், கப்பலின் நுனிப் பகுதிக்குச் செல்லவும் முடியாமல் அவர்கள் திணறிய விடியோ ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

மாநில முதல்வரின் மனைவியே இவ்வாறு செல்ஃபி மோகத்தில் பாதுகாப்புத் தடைகளை உடைத்தெறிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.