பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஒடிஸாவில்.. முதல் முறையாக பெட்ரோல் விலையை விட அதிக விலைக்கு விற்பனையாகும் டீசல்

சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக ஒடிஸாவில் பெட்ரோலை விட அதிக விலைக்கு டீசல் விற்பனையாகி வருகிறது.

News image
Updated On :22 அக்டோபர் 2018, 11:41 am


புவனேஸ்வர்: சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக ஒடிஸாவில் பெட்ரோலை விட அதிக விலைக்கு டீசல் விற்பனையாகி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக ஒடிஸாவில் பெட்ரோலை விட கூடுதல் விலைக்கு டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதாவது, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.65க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 12 பைசா அதிகமாக டீசல் லிட்டருக்கு ரூ.80.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாஜகவின் தவறான கொள்கை முடிவுகளால் இதுபோன்ற விலை மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக ஒடிஸா நிதித்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து உத்கல் பெட்ரோலியம் டீலர்களின் சங்கப் பொதுச் செயலர் சஞ்சய் லத் கூறுகையில், மற்ற மாநிலங்கள் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு தனித்தனி வாட் வரி விதித்துள்ளன. ஆனால் ஒடிஸாவில் இரண்டுக்குமே பொதுவாக 26 சதவீத வாட் வரியே விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒடிஸாவில் டீசல் விலை ஏற்றத்தால் விற்பனை சரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.