வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அமிருதசரஸ்  ரயில் விபத்து: சிபிஐ விசாரணை கோரி பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு  

அமிருதசரஸ்  ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:07 pm

ANI

சண்டிகார்: அமிருதசரஸ்  ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை இரவு ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதைக் காண்பதற்கு ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களில் பலர், அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்று, ராவண வதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் 61 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் முதல்வர் அமரீந்தர் சிங், சனிக்கிழமை விபத்து நேரிட்ட இடத்தைப் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களையும், உயிரிழந்தவர்களின் உறவினர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

அதேசமயம் பிரதமர் மோடி உயிரிழந்ததோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அறிவித்துள்ளார்.  

இந்நிலையில் அமிருதசரஸ்  ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல்செய்யப்பட்டுள்ளது. 

குருகிராமம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் குமார் தகோரியா என்பவர் பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு  ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அமிருதசரஸ்  ரயில் விபத்து தொடர்பாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணையோ அல்லது இதற்கென சிறப்பு விசாரணைக் குழு ஒன்றோ உருவாக்கப்பட வேண்டும்   

அதேநேரம் இந்த விபத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்புகள் அனைத்தையும் முறையாக கணக்கிட்டு, வழங்க வேண்டிய இழப்பீட்டை உறுதி செய்யும் பொருட்டு ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கக் கூடிய நீதிபதிகளைக் கொண்ட ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

இந்த கோர விபத்துக்கான காரணமாக அமைந்த அசட்டையான விஷயங்கள் குறித்து ஆராய்வதோடு, எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது குறித்து நடவடிக்கைகள் எடுக்குமாறு அமிருதசரஸ் நகர்மன்ற மற்றும் காவல்துறைக்கு உத்தரவோ அல்லது வழிமுறைகளோ கொடுக்கப்பட வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.