திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீரில் தத்தளித்தவர்களை விமானம் மூலம் மீட்கவும், உணவு தானியங்களை வழங்கியதற்கும் ரூ.291 கோடியை கட்டணமாகக் கேட்டுள்ளது மத்திய அரசு.
கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் கன மழையைத் தொடர்ந்து பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது வழங்கப்பட்ட விமான சேவை மற்றும் உணவு தானிய வழங்கல் பணிக்காக மத்திய அரசு ரூ.291.74 கோடியை கட்டணமாகக் கேட்டுள்ளது.
இந்த தகவலை, கேரள சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
மேலும், மாநில பேரிடர் மீட்பு நிதியாக ரூ.987.73 கோடி இருந்ததாகவும், இதில் இருந்து வெள்ள மீட்புப் பணிகளுக்காக ரூ.586.04 கோடி செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், மாநில அரசுக்கு இருக்கும் கடன்களை செலுத்த உடனடியாக ரூ.706.74 கோடி தேவைப்படுவதாகவும், இதில் மத்திய அரசு விதித்திருக்கும் ரூ.290.74 கோடியும் அடங்கும். இதில் விமானத்தைப் பயன்படுத்தியதற்காக மட்டும் ரூ.33.79 கோடி கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பேரிடர் மீட்பு நிதியில் இருந்து தற்போது தேவைப்படும் செலவை செய்துவிட்டாலும், கடன்களை அடைக்க அதிகளவில் பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
முதல்வரின் பேரிடர் மேலாண்மை நிதிக்கு ரூ.2,683.16 கோடி பணம் நன்கொடை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கிடைத்திருப்பதாகவும், அதில்எஇருந்து தற்போது வரை ரூ.688.48 கோடி செலவிடப்பட்டிருப்பதாகவும் சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு

தமிழகத்தில் மயோனைஸுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!

ஏப். 29 வரை வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


