நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கிறிஸ்தவ மதம் மாறச் சொன்ன பள்ளி நிர்வாகம்: ஆசிரியை புகார் மீது உயர் நீதிமன்றம் உத்தரவு

கட்டாயம் கிறிஸ்தவ மதம் மாறச் சொன்ன பள்ளி நிர்வாகத்தின் மீது ஆசிரியை அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:45 pm

ENS

கட்டாயம் கிறிஸ்தவ மதம் மாறச் சொன்ன பள்ளி நிர்வாகத்தின் மீது ஆசிரியை அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஞ்சியில் செயல்பட்டு வரும் கார்மல் பள்ளியில் நளினி நாயக் என்ற ஆசிரியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் 3 நிர்வாகிகள் மீது கட்டாயம் மதம் மாற மிரட்டியதாக போலீஸில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் அதை வழக்குப் பதிவு செய்ய மறுத்ததாகக் கூறி ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு மீதான விசாரணை செவ்வாய்கிழமை நடைபெற்ற நிலையில், அப்புகாரின் போரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என போலீஸாருக்கு ராஞ்சி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, கார்மல் பள்ளியில் கிறிஸ்தவ மதம் மாறுவதாக அளித்த ஒப்புதலின் பேரிலேயே அவருக்கு அங்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அதற்கு மறுத்ததால் தொடர்ந்து மிரட்டியும், பணி நீக்கம் செய்ததாக ஆசிரியை நளினி நாயக் தனது புகாரில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.