சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மத்தியப் பிரதேசம், மிசோரம் மக்களுக்கு பிரதமர் மோடி வைத்திருக்கும் அன்புக் கோரிக்கை

மத்தியப் பிரதேசம், மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி அன்புக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

News image
Updated On :28 நவம்பர் 2018, 5:20 am


புது தில்லி: மத்தியப் பிரதேசம், மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி அன்புக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநில மக்களுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மாநிலத்தில் இன்று நடைபெறும் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான வாக்குப்பதிவில் அனைத்து வாக்காளர்களும் தவறாது வாக்களித்து, மிகப்பெரிய அளவில் வாக்குப்பதிவை நிறைவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மிசோம் மாநிலத்தில் வாழும் சகோதர, சகோதரிகளே, இளம் வாக்காளர்களே, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி ஒட்டுமொத்த வாக்குப்பதிவை உயர்த்த வேண்டும் என்று கூறினார்.

மத்தியப் பிரதேசத்துக்கு 230 தொகுதிகளுக்கும், மிசோரமில் 40 தொகுதிகளுக்கும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் 2003ம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் பாஜக, தொடர்ந்து 4வது முறையாக ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் நிலையில், மிசோரமில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்று விரும்புகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ம் தேதி நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.