புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

ஜனவரி முதல் வாரத்தில் இருந்து புதிய கட்டடத்தில் ஆந்திர உயர் நீதிமன்றம்

புதிய உயர் நீதிமன்ற கட்டடத்தை ஆந்திர நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

News image
Updated On :27 நவம்பர் 2018, 9:36 am

ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் தெலங்கானா மற்றும் ஆந்திர என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவின் அரசு அலுவலகங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஆந்திர தலைநகரான அமராவதிக்கு மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமராவதியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தில் ஆந்திராவுக்கான உயர் நீதிமன்றத்தின் புதிய கட்டடம் வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து இயங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இதுதொடர்பாக புதிய உயர் நீதிமன்ற கட்டடத்தை ஆந்திர நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் உத்தரவு கிடைத்தவுடன் இந்த மாற்றம் உடனடியாக அமல்படுத்த வாய்ப்புள்ளதாக நீதிமன்ற நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.