புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

சபரிமலை எஸ்.பி. அலுவலகம் நோக்கி பாஜக பேரணி அறிவிப்பு

சபரிமலையில் போலீஸார் ஏற்படுத்தியுள்ள கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தேசியச் செயலாளர் கே.சுரேந்திரன் பேரணி அறிவித்துள்ளார்.

News image
Updated On :26 நவம்பர் 2018, 12:16 pm

சபரிமலையில் போலீஸார் ஏற்படுத்தியுள்ள கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தேசியச் செயலாளர் கே.சுரேந்திரன் பேரணி அறிவித்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஐயப்ப பக்தர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கேரள போலீஸார் தடியடி நடத்தி ஐயப்ப பக்தர்களை விலக்கி வருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலை, நிலக்கல், பம்பா உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் ஏற்படுத்தியுள்ள கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.பி. அலுவலகம் நோக்கி பேரணி நடத்தவுள்ளதாக அம்மாநில பாஜக தேசியச் செயலாளர் கே.சுரேந்திரன் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்தி கேரள அரசு தவறாகப் பயன்படுத்தி வருவதாக சபரிமலை மாவட்ட பாஜக தலைவர் என்.ஹரி குற்றம்சாட்டினார். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களையும் அவர்கள் மறித்து வருவதாக கடுமையாகச் சாடினார்.

அதுமட்டுமல்லாமல் நிலக்கல் பகுதியில் இருந்து தரிசனம் செய்ய 6 மணி நேரம் மட்டுமே போலீஸார் அனுமதி வழங்கியுள்ளதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக பல கம்யூனிஸ்டு அமைச்சர்கள் மீது கிரிமினல் மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களை விடுத்து கே.சுரேந்திரன் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டதாகவும் என்.ஹரி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.