டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இந்திய சிறைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்க மத்திய அரசின் புதிய திட்டம்

சிறையில் இருக்கும் ஏழை விசாரணைக் கைதிகள் பெயிலில் வெளியே செல்லத் தேவையான வைப்புத் தொகையை மத்திய அரசே செலுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:10 pm

ENS


புது தில்லி: சிறைகளில் இருக்கும் ஏழை விசாரணைக் கைதிகள் பெயிலில் வெளியே செல்லத் தேவையான வைப்புத் தொகையை மத்திய அரசே செலுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

ஏதேனும் சிறிய வழக்கில் சிக்கி விசாரணையில் இருக்கும் விசாரணைக் கைதிகள் பெயிலில் வெளியே செல்ல நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைத் தொகையை செலுத்த பணம் இல்லாத காரணத்தால், ஏராளமான விசாரணைக் கைதிகள் சிறையிலேயே காலம் கழிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால், சிறைகளில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், கூட்ட நெரிசலைக் குறைக்க என்ன செய்வது என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை ஆலோசித்தது.

இதில், உதித்ததுதான் இந்த திட்டம். இதன் முதற்கட்டமாக பல்வேறு சிறைகளில் இருக்கும் 11,916 பெண் விசாரணைக் கைதிகளின் சார்பில் பெயிலுக்கான பணத்தை மத்திய அரசே செலுத்தி அவர்களை பெயிலில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 2015ம் ஆண்டு நிலவரப்படி, இந்திய சிறைகளில் சுமார் 3 லட்சம் விசாரணைக் கைதிகள் இருக்கின்றனர். இவர்களில் 62 ஆயிரம் பேர் உத்தரப்பிரதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாநில அரசுகளிடம் யோசனை கேட்கப்பட்டதில், பல மாநிலங்கள் இத்திட்டத்துக்கு வரவேற்பு அளித்துள்ளன.

சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகளை பெயிலில் வெளியே அனுப்ப முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு நிபந்தனை பணமாக ரூ.500 முதல் ரூ.5,000 வரை செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்திய சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருப்பது குறித்து உச்ச நீதிமன்றமும் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.