ரயில்வே டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா? இனி மொபைல் செயலியே சொல்லிவிடுமே!
காத்திருப்பு அல்லது ஆர்ஏசி முறையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அது கன்ஃபார்ம் ஆக எத்தனை சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து மொபைல் செயலியே இனி சொல்லிவிடும்.


புது தில்லி: காத்திருப்பு அல்லது ஆர்ஏசி முறையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அது கன்ஃபார்ம் ஆக எத்தனை சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து மொபைல் செயலியே இனி சொல்லிவிடும்.
ஐஆர்சிடிசியின் மொபைல் ஆப்பில் இன்று முதல் இந்த புதிய சேவை இணைகிறது.
அதாவது, காத்திருப்பு அல்லது ஆர்ஏசி முறையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, 'வெயிட்லிஸ்ட் பிரிடிக்ஷன்' என்ற வாய்ப்பைக் கிளிக் செய்தால், அந்த டிக்கெட் கன்பார்ம் ஆக எத்தனை சதவீத வாய்ப்புகள் உள்ளது என்பதை கூறும்.
இந்த புதிய வசதியைப் பயன்படுத்தினால், காத்திருப்பு அல்லது ஆர்ஏசி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாமா? அல்லது வேறு ஏதேனும் மாற்று வழிகளை நாடலாமா என்பது குறித்து நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். இதனால், காத்திருப்புப் பட்டியலில் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவது தடுக்கப்படும்.
கடந்த இரண்டு ஆண்டு கால வரலாற்றை கவனமாக பார்த்து வந்தால், ஒரு காத்திருப்பு ரயில் டிக்கெட் உறுதியாகுமா என்பதை யார் ஒருவரும் கணித்து விடலாம். இந்த அடிப்படையில்தான் புதிய சேவை துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காத்திருப்பு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு டிக்கெட் கிடைக்காமல் ஏமாறுவோரின் எண்ணிக்கைக் குறையும் என்று எதிர்பார்ப்பதாக ரயில்வே அதிகாரி கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...