எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

அருணாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக விமான சேவை துவக்கம்

அருணாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக விமான சேவை திங்கள்கிழமை துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:06 pm

Raghavendran

அருணாச்சலப் பிரதேசத்தில் முதன்முறையாக விமான சேவை திங்கள்கிழமை துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலைன்ஸ் ஏர் நிறுவனத்தில் 42 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் எர்கிராஃப்ட் விமானம் முதன்முறையாக இயக்கப்பட்டுள்ளது. பாஸிகட் என்ற இடத்தில் அமைந்துள்ள விமானநிலையத்தில் மதியம் 2.15 மணியளவில் குவாஹட்டியில் இருந்து வந்திறங்கிய இந்த விமானத்தில் மாநில முதல்வர் பீமா கண்டு உள்ளிட்ட 25 பயணிகள் பயணம் செய்தனர்.

மொத்தம் 120 ஹெலிபேட்கள் உட்பட நவீனமயமான 10 இறங்குதளங்களுடன் அமைந்துள்ள இந்த விமான நிலையம், ராணுவ சேவைக்காகவும் பயண்படுத்தப்படவுள்ளது. முதலாவதாக இவ்வழியாக கொல்கத்தா முதல் குவாஹட்டி வரையிலான பயணிகள் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை என வாரத்தில் 3 தினங்கள் விமானங்கள் இயக்கப்படவுள்ளது. 

இதுகுறித்து அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா கண்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.