எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

இமயத்தின் சிகரம் தொட்ட இளம் இந்தியர்: பிரதமர் மோடி பாராட்டு

இமயமலையின் சிகரம் தொட்ட இளம் இந்தியர் என்ற சாதனையை ஹரியாணா சிறுமி பெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:06 pm

Raghavendran

ஹரியாணா மாநிலத்தில் ஹிஸார் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷிவாங்கி பதக் (வயது 16). இவர், இமயமலையின் சிகரம் தொட்ட இளம் இந்தியர் என்ற சாதனையை ஞாயிற்றுக்கிழமை (மே 20-ஆம் தேதி) படைத்தார். நேபாளத்தின் காத்மாண்டுவுக்கு ஏப்ரல் மாதம் வந்தவர், 6-ஆம் தேதி தனது சாதனைப் பயணத்தை தொடங்கினார்.

இன்னும் 2 மாதங்களில் தனது 17-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள ஷிவாங்கி, நான் இங்கே எனது சிறு வயது கனவை நினைவாக்க வந்துள்ளேன். இந்த அழகிய உலகில் அமைந்துள்ள அனைத்து மலைகளின் சிகரங்களையும் தொட வேண்டும் என்பதே எனது வாழ்நாள் இலக்கு. எனக்கு 15 வயதான போது அருணிமா சின்ஹாவுடைய வாழ்க்கைப் படத்தைப் பார்த்தேன். அப்போது முதல் அவரால் சாதிக்க முடிந்தது என்னாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. எனக்கு படிப்பில் பெரிய நாட்டமில்லை. எனவே மலையேற்றத்தை தேர்வு செய்தேன் என்றார்.

ஜவஹர் மலையேறும் பயிற்சி மையத்தில் அடிப்படையிலிருந்து மலையேறும் பயிற்சியை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் காஷ்மீர் மலைப்பகுதிகளிலும் பயிற்சி பெற்றுள்ளார். சிறுமி ஷிவாங்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 346 பேருக்கு இந்த ஆண்டு இமையமலையின் சிகரம் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நேபாள சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. மேலும், தூய்மை கங்கை மற்றும் இமயமலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக எல்லையோரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குழுவையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இந்த குழுவினர் மலையேறுபவர்களால் வீசப்படும் குப்பைகளை சுத்தம் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.