எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

நிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்: பினராயி விஜயன்

நிபா வைரஸ் தாக்கம் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:06 pm

Raghavendran

கேரளா மாநிலத்தில் கடந்த 3 தினங்களுக்குள் நிபா எனும் புதிய வகை வைரஸ் கிருமி தாக்கியதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், இந்த நோய் குறித்து கேரள முதல்வர் அரசு தரப்பு ட்விட்டர் பக்கத்தில் பினராயி விஜயன் சார்பில் பதிவிட்டுள்ளதாவது:

நிபா வைரஸ் தாக்கம் குறித்து கேரள அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதிலும், நோய் தாக்கம் பரவாமல் தடுப்பதிலும் சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நோய் பாதிப்பின் காரணமாக 4-ல் 3 பேர் உயிரிழப்பதாக தேசிய வைரஸ் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

Story image

கேரளாவில் கடந்த 19-ஆம் தேதி நிபா பாதிப்பின் காரணமாக முதல் இறப்பு நேரிட்டுள்ளது. உடனடியாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் உலக சுகாதார நிறுவனம் தொடர்புகொண்டு நிலவரங்களை கேட்டறிந்தது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதுபோல அனைத்து இடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தொடர்பாக 24 மணிநேர சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கேரள அரசு கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் உயர்நிலை மருத்துவக்குழு இங்கு விரைந்துள்ளது.

Story image

முதலாவதாக கோழிக்கோட்டில் மட்டுமே இந்த நோயின் தாக்கம் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், மாநிலம் முழுவதும் இந்த சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிபா வைரஸ் தொடர்பாக சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு மக்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.