டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ராஜீவ் காந்தி நினைவு தினம்: மிகவும் அரிய புகைப்படங்களின் தொகுப்பு

சுதந்திர இந்தியாவின் 6வது பிரதமர் ராஜீவ் காந்தி. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள வந்த ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:06 pm

ENS


சுதந்திர இந்தியாவின் 6வது பிரதமர் ராஜீவ் காந்தி. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள வந்த ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இன்று அவரது 27வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ராஜீவ் காந்தியை, எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்த தேன்மொழி ராஜரத்தினம் என்ற பெண் புலி, தனது உடலில் கட்டிவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து படுகொலை செய்தார்.

Story image

இலங்கையில், தனி ஈழம் கோரி விடுதலைப் புலிகள் அமைப்பு கடுமையான போரில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அரசுக்கும் இடையே இருந்த உறவு 1987ல் உடைந்தது. 

Story image

1987ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி கொழும்பு சென்றிருந்தபோது, இலங்கையின் கப்பற்படை அதிகாரி விஜிதா ரஹானா, ராஜீவ் காந்தியை தாக்க முயன்றார்.

Story image

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் சந்தித்துப் பேசிய போது.

Story image

அமைதி முறையில் தீர்வு காணும் திட்டத்துக்கு ஒப்புக் கொண்டு ஜாஃப்னாவில் ஆயுதங்களை ஒப்படைத்த எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகள் அமைப்பினர்.

Story image

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.

Story image

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

Story image

ராஜீவ் காந்தி படுகொலையில் ஈடுபட்ட தேன்மொழி ராஜரத்தினத்துடன் நளினி.

Story image

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி சிவராசன், பெங்களூருவில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Story image

ராஜீவ் காந்தி படுகொலையை நிகழ்த்திய குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடம்.

Story image

ராஜீவ் காந்தி படுகொலையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட நளினி.

Story image

படுகொலை நிகழ்த்தப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம்

Story image

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்த்தப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவிடம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.