கொச்சி: வாகனம் ஓட்டும்பொழுது மொபைல் போனில் பேசுவது குற்றம் அல்ல என்று கேரள உயர் நீதிமன்றத்தின் அமர்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் 16 அன்று அதிவேகமாக கார் ஒட்டியதாகவும், வாகனம் ஓட்டும் பொழுது மொபைல் போனில் பேசியதாகவும், கேரள காவல்துறை சட்டப் பிரிவு 118 (e ) -ன் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த சட்டப் பிரிவானது பொதுமக்களுக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவோ அல்லது பொதுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலோ தெரிந்தே செய்யப்படும் செயல்களுக்கு தணடனை அளிப்பதை வலியுறுத்துகிறது.
ஆனால் தன் மீது குறிப்பிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தது தவறு என்றும், வாகனம் ஓட்டும் பொழுது மொபைல் போனில் பேசுவது என்பதை இந்த சட்டப்பிரிவுகளின் கீழ்வராது என்று கூறியும் சந்தோஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தனி நீதிபதி ஒருவர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி நீதிபதிகள் ஷபீக் மற்றும் சோமராஜன் அடங்கிய அமர்வின் முன் இந்த வழக்கு வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வாகனம் ஓட்டும்பொழுது மொபைல் போனில் பேசுவது என்பது பொதுமக்களுக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவோ அல்லது பொதுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலோ உள்ள செயல் என்பதற்கான தெளிவான சட்ட உள் பிரிவுகள் எதுவும், கேரள காவல்துறை சட்டப் பிரிவு 118 (e ) -இல் இல்லை . எனவே சந்தோஷ் மீது வழக்கு தொடர்வது என்பது இயலாத செயல் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

