தற்போதெல்லாம் தேர்தல்களில் ஏராளமான சுவாரஸ்ய சம்பவங்கள் தடையின்றி நடந்து விடுகின்றன. அதிலும் நோட்டா என்ற முறை அமலுக்கு வந்த பிறகு, அது சுவாரஸ்யத்துக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தது முதல், அரசமைக்கும் விஷயத்தில் தொடர்ந்து இழுறி, இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றது வரை பரபரப்புகளுக்கு பஞ்சமில்லை.
அதே போல, நோட்டாவால் சுவாரஸ்யத்துக்கும் இங்கே பஞ்சமில்லை என்றே சொல்லலாம்.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மஸ்கி தொகுதியில், வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசத்தை விட 9 மடங்கு அதிகமாக நோட்டாவுக்கு வாக்குகள் விழுந்துள்ளது.
இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் கௌட பட்டீல் 60,387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் பசவன்னகௌட துர்விஹால் 60,174 வாக்குகள் பெற்றார். பிரதாப் கௌட நூலிழையில் அதாவது 213 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை நிலவரம் மாறிக் கொண்டே இருந்தது. கடைசியாக பிரதாப் கௌடவின் வெற்றி பதிவானது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த தொகுதியில் மட்டும் நோட்டா பெற்ற வாக்குகள் 2,049 ஆகும். அதாவது காங்கிரஸ் வேட்பாளர் 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, இதை விட 9 மடங்கு கூடுதல் வாக்குகளை நோட்டா பெற்றிருப்பதுதான். அதுமட்டுமல்லாமல் இந்த தொகுதியில் போட்டியிட்ட மேலும் 3 வேட்பாளர்களும் தலா ஆயிரம் வாக்குகளைக் கூட பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் தாண்டி, நம்மை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்துவது என்ன தெரியுமா? கர்நாடக தேர்தலில் சுமார் 3.22 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கே தனது வாக்குகளை செலுத்தியுள்ளனர் என்பதுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!

5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை, 4 ஆயுள் தண்டனை!

சென்னையிலிருந்து நெல்லைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

வாழ்க்கை மீதான பேராவல் - நூல் அறிமுகம் | விமர்சனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


