அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

பாஜக எம்எல்ஏ-க்கள் 6 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர்: காங்கிரஸ் தலைவர் எம்.பி.பாடீல்

பாஜக-வைச் சேர்ந்த 6 எம்எல்ஏ-க்கள் தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் எம்.பி.பாடீல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:04 pm

Raghavendran

பாஜக-வைச் சேர்ந்த 6 எம்எல்ஏ-க்கள் தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் எம்.பி.பாடீல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். அதுபோல மஜத, காங்கிரஸ் கூட்டணியும் கோரிக்கை வைத்துள்ளது.

எனவே ஆட்சி அமைப்பது தொடர்பாக பெரும்பான்மையை நிரூபிக்கும் விதமாக எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெரும் வகையில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், பாஜக எம்எல்ஏ-க்கள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் எம்.பி.பாடீல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

இங்கு காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். எங்கள் எம்எல்ஏ-க்கள் கட்சி மாறுவதாக வரும் தகவல்கள் எல்லாம் வதந்தியாகும். ஆனால் பாஜக-வைச் சேர்ந்த 6 எம்எல்ஏ-க்கள் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.