டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கர்நாடகா: தேர்தலில் வாக்களிப்பதில் சாதனை படைத்த 111 வயது சுவாமிஜி

நடக்கும் தெய்வம் என்று அழைக்கப்படும் 111 வயது ஸ்ரீ ஷிவக்குமார சுவாமிஜி, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்தினார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:02 pm

ENS


துமகுரு: நடக்கும் தெய்வம் என்று அழைக்கப்படும் 111 வயது ஸ்ரீ ஷிவக்குமார சுவாமிஜி, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்தினார்.

ஏராளமானோருக்கு முன்னுதாரணமாக விளங்கும் சுவாமிஜி, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தல் முதல் மக்களவைத் தேர்தல் வரை ஒரு தேர்தலைக் கூட புறக்கணிக்காமல், ஒவ்வொரு முறையும் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

தான் வாக்களிக்க விரும்பும் வேட்பாளருக்கு தனது வாக்கினை செலுத்தி விடுவார். இந்த தள்ளாத வயதிலும் அவர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்.

ஒவ்வொரு தேர்தலின் போதும், தனது பூஜைகளை அதிகாலையிலேயே தொடங்கி விரைவாக முடித்துவிட்டு, தனக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்களிக்க வந்து வரிசையில் நின்றுவிடுவார் சுவாமிஜி. ஆனால், இந்த தேர்தலில் முதல் முறையாக, வயோதிகம் காரணமாக அவ்வளவு விரைவாக வாக்குச்சாவடிக்கு வரமுடியவில்லை. 

தனது சிஷ்யர்களுடன் 10.15 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்தினார். சுதந்திர இந்தியாவில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தனது வாக்கினை செலுத்தி, ஒரு சாதனையை அவர் படைத்துள்ளார்.

இது குறித்து அவரது மடத்தின் அதிகாரி கூறுகையில், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த தேர்தல்களில் வரி செலுத்துவோருக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது. அப்போதும் சுவாமிஜி தனது வாக்கினை செலுத்தியுள்ளார் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.