கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பாவப்பட்ட கரங்களில் கற்களும், துப்பாக்கிகளும் உள்ளன: மெஹபூபா முஃப்தி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அரசாட்சி விதிமுறைப்படி 6 மாதங்களுக்கு ஒரு முறை ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு ஆகிய இரு தலைநகரங்களிலும் அரசாங்கப் பணிகள் மாற்றியமைக்கப்பட்டு செயல்படும்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:59 pm

Raghavendran

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அரசாட்சி விதிமுறைப்படி 6 மாதங்களுக்கு ஒரு முறை ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு ஆகிய இரு தலைநகரங்களிலும் அரசாங்கப் பணிகள் மாற்றியமைக்கப்பட்டு செயல்படும். இதன் அடிப்படையில் ஜம்மு-வில் கடந்த 6 மாத காலமாக செயல்பட்டு வந்த அம்மாநில அரசாங்கப் பணிகள் சனிக்கிழமையுடன் முடிவுற்றது. 

இதையடுத்து ஸ்ரீநகரில் அரசாங்கப் பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கியது. அப்போது ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நம்முடைய ராணுவ வீரர்களும், குழந்தைகளும் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். கற்களும், துப்பாக்கிகளும் பாவப்பட்ட கரங்களில் உள்ளன. எனவே இவர்கள் அனைவரையும் காக்கும் விதமாக இவ்விவகாரத்தில் நடுநிலையுடன் இருந்து செயல்பட வேண்டியது கட்டாயம் என்றார்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் ராணுவத்துக்கும், ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோதலில் அந்த இயக்கத்தைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், ஒருவர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்தவராவார். இந்த மோதலைக் கண்டித்து இளைஞர்களும், அப்பகுதி மக்களும் போரட்டம் நடத்தியபோது வன்முறை வெடித்ததில் 5 பேர் பலியாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.