கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

எல்லையில் இனிப்பு பரிமாறிக்கொண்ட இந்தியா-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்

எல்லைப்பகுதியில் இந்திய எல்லையோரப் படையினருடன் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வெள்ளிக்கிழமை இனிப்பு பரிமாறிக்கொண்டனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:33 pm

Raghavendran

லாஹூர் தீர்மானத்தை கொண்டாடும் விதமாக இந்திய எல்லையோரப் படையினருக்கு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.

கடந்த 1940-ஆம் வருடம் மார்ச் 23-ந் தேதி முஸ்லிம்களுக்கு தனிநாடு ஏற்படுத்தக் கோரி முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக லாஹுர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அவர்களுக்கு தனிநாடு ஏற்பட்டதுடன், பின்னாளில் அது பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது.

இதை கொண்டாடும் விதமாக பாகிஸ்தான் அரசு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23-ந் தேதி பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அவ்வகையில் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தினரும் இந்த தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில், அட்டாரி - வாகா எல்லைப் பகுதியில் உள்ள இந்திய எல்லையோரப் படையினருக்கு, பாகிஸ்தான் ராணுவத்தினர் இனிப்புகளை வழங்கி லாஹூர் தீர்மானம் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். 

இருநாடுகளுக்கு இடையில் நிலவும் எல்லைப் பிரச்னையில் இருநாட்டு ராணுவ வீரர்களிடையே ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு மேலோங்கும் விதமாக இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.