தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

25 கிலோ கட்டியுடன் வாழ முடியவில்லை: கருணை கொலை செய்யக் கோரும் ஆந்திரப் பெண்

வயிற்றில்  இருக்கும் 25 கிலோ கட்டியால் ஏற்படும் அதீத வலியுடன் தன்னால் வாழ முடியவில்லை என்றும், தன்னை கருணைக் கொலை செய்யுமாறும் ஆந்திராவைச் சேர்ந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

News image
Updated On :21 மார்ச் 2018, 10:43 am


காக்கிநாடா: வயிற்றில்  இருக்கும் 25 கிலோ கட்டியால் ஏற்படும் அதீத வலியுடன் தன்னால் வாழ முடியவில்லை என்றும், தன்னை கருணைக் கொலை செய்யுமாறும் ஆந்திராவைச் சேர்ந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மிஷ்ராவிடம் இது குறித்து 37 வயதாகும் பட்டி ராமலஷ்மியின் கணவர் கோண்டா பாபு நேற்று மனு அளித்தார்.

குறை தீர் முகாமுக்கு தனது கணவருடன் ஆட்டோவில் வந்த பட்டி ராமலஷ்மியால் ஆட்டோவில் இருந்து இறங்க முடியாததால், அவர் சார்பில் மனுவை ஆட்சியரிடம் கோண்டா பாபு வழங்கினார்.

தனது வயிற்றில் வளரும் கட்டியை அகற்ற ரூ.4.5 லட்சம் செலவாகும். அதனை செலுத்த தன்னிடம் பணமில்லாததால், தன்னை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆட்சியர், என்டிஆர் ஆரோக்யா ஸ்ரீ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் தெரிவித்து, அப்பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். தம்பதியர் நம்பிக்கையை இழந்து விட வேண்டாம் என்றும், அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற தனது அதிகாரத்துக்கு உட்பட்டு எந்த விதமான உதவிகளை செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.

நாளுக்கு நாள் வலி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கட்டி வளர்வதால் என்னால் அசையக் கூட முடியவில்லை. எனவேதான் கருணைக் கொலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளேன் என்கிறார் பட்டி ராமலஷ்மி கண்ணீரோடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.