கடைசியாக இருந்த ஒரே ஆயுதம் செல்போன், மெமரி கார்டு, அதிலும் காவல்துறை கோட்டைவிட்டது. அது சத்யா பயன்படுத்திய செல்போன்தான் என்பதை காவல்துறை நிரூபிக்கவில்லை. சரி மெமரி கார்டில் தேப்நாத்தின் புகைப்படம் இருந்ததாகக் கூறுவதை விசாரித்த நீதிமன்றம், அந்த புகைப்படத்தைத் தவிர மெமரி கார்டில் வேறு எதுவுமே இல்லாதது குறித்து கேள்வி எழுப்பினர். சத்யா பயன்படுத்திய செல்போனில் இந்த மெமரி கார்டு இருந்திருந்தால் நிச்சயம் அதில் வேறு சில கோப்புகளும் இருந்திருக்கும். 3 புகைப்படங்கள் மட்டுமே இருந்துள்ளன. இது சத்யாவின் செல்போனில் இருந்ததா? என்பதே சந்தேகத்தை எழுப்புகிறது என்றார்கள். அதிலும், கொலை தொடர்பாக பறிமுதல் செய்த பொருட்களின் பட்டியலில் மெமரி கார்டு இல்லவே இல்லை.