அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மத்திய பட்ஜெட் மசோதா: விவாதமின்றி நிறைவேறியது

தெலுங்கு தேசம், அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அமளி காரணமாக மத்திய பட்ஜெட் மசோதா விவாதமின்றி புதன்கிழமை நிறைவேறியது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:28 pm

Raghavendran

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு கடந்த திங்கள்கிழமை (மார்ச் 5-ஆம் தேதி) முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் முழுவதும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகளை வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அவையின் நடவடிக்கைகள் பாதிப்படைந்து வருகின்றன.

நீரவ் மோடி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அதிமுக, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் ஏப்ரல் 1-ந் தேதி முதல் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், புதன்கிழமை அவை நடவடிக்கைகள் பகல் 12 மணியளவில் மீண்டும் துவங்கியபோது எதிர்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதையடுத்து, மத்திய பட்ஜெட் மசோதா மீது விவாதம் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது.

இதற்கிடையில், நேரம் குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய பட்ஜெட் தொடர்பான நிதி ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், குரல் ஓட்டெடுப்புக்கு அனுமதியளித்தார். எனவே குரல் ஓட்டெடுப்பு முறையில் இந்த மசோதா எளிதில் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.