அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

பாஜக மீது வாக்காளர்கள் கோபத்தில் உள்ளனர்: காங்கிரஸ் தலைவர் ராகுல்

மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கத்தின் மீது வாக்காளர்கள் கோபத்தில் உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:28 pm

Raghavendran

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத், அம்மாநில முதல்வராக கடந்த ஆண்டு தேர்வானதைத் தொடர்ந்து, எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதேபோல், துணை முதல்வராக தேர்வான கேசவ் பிரசாத் மௌர்யா, பூல்பூர் தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து இவ்விரு தொகுதிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில், இரு மக்களைவை தொகுதிகளிலும் சமாஜவாதி தொடர்ந்து முன்னிலை பெற்று, பூல்பூர் தொகுதியை கைப்பற்றியுள்ளது. இதனால் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதுபோல பிகாரில் உள்ள ஆராரியா மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அங்கு எதிர்கட்சியாக உள்ள லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

இந்த இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது நாட்டிலுள்ள வாக்காளர்கள் ஆளும் பாஜக அரசு மீது கடும் கோபத்தில் இருப்பது தெரிகிறது. அதனால் தான் பாஜக அல்லாதவர்களை வெற்றிபெற வைத்துள்ளனர். 

இதில் வெற்றிபெற்றுள்ள வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் அனைவருக்குமான அரசை அமைக்க காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் அது ஒரு இரவில் நடந்துவிடாது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.