அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

உ.பி., பிகார் இடைத்தேர்தல் முடிவுகள்: படுதோல்வியைச் சந்தித்த பாஜக

உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாரில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:28 pm

Raghavendran

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத், அம்மாநில முதல்வராக கடந்த ஆண்டு தேர்வானதைத் தொடர்ந்து, எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதேபோல், துணை முதல்வராக தேர்வான கேசவ் பிரசாத் மௌர்யா, பூல்பூர் தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து இவ்விரு தொகுதிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில், இரு மக்களவை தொகுதிகளிலும் சமாஜவாதி கட்சி, முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் இருந்தே தொடர்ந்து முன்னிலை பெற்று, வெற்றிபெற்று இரு தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் பூல்பூர் தொகுதியில் சமாஜவாதி கட்சியின் நாகேந்திர பிரதாப்சிங் படேல் 59,613 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கௌஷலேந்திர சிங் படேலை வீழ்த்தினார். அதுபோல கோரக்பூர் தொகுதியில் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த பிரவீண் குமார் நிஷாத் 21,881 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் உபேந்திர தத் சுக்லாவை வீழ்த்தினார்.

அதுபோல பிகாரில் நடைபெற்ற 3 இடங்களுக்கான இடைத்தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 2 இடங்களிலும், பாஜக 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

பிகாரின் ஆராரியா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் 61,988 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தினார். ஜெஹனாபாத் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரை 35,036 வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் வீழ்த்தினார். பாபூவா பேரவைத் தொகுதியில் மட்டும் பாஜகவின் ரிங்கி ராணி பாண்டே 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஷாம்பூ சிங் படேலை தோற்கடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.