2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அலைபேசியில் தொடர்ந்து ஆபாசப் படங்கள் பார்த்து வந்த மகனின் கையை வெட்டிய தந்தை! 

தனது எச்சரிக்கையையும் மீறி அலைபேசியில் தொடர்ந்து ஆபாசப் படங்கள் பார்த்து வந்த மகனின் கையை  தந்தை ஒருவர் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:24 pm

IANS

ஹைதராபாத்: தனது எச்சரிக்கையையும் மீறி அலைபேசியில் தொடர்ந்து ஆபாசப் படங்கள் பார்த்து வந்த மகனின் கையை  தந்தை ஒருவர் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹைதாராபாத்தின் பஹடி ஷரீப் பகுதியைச் சேர்ந்தவர் மொஹம்மத் கையூம் குரேஷி (45). இறைச்சிக் கடை வைத்துள்ளார். இவரது மகன் காலித் (19). இவர் அந்த பகுதியில் உள்ள கேபிள் ஆபரேட்டர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

அலைபேசியில் தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் பார்த்து வருவது என்பது காலித்தின் பொழுதுபோக்கு. தனது வேலைக்கும் சரியாகப் போகாமல், இரவில் கண்விழித்து காலித் தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்தது அவரது தந்தை குரேஷிக்கு கடும் எரிச்சலை ஊட்டியது.

இது தொடர்பாக அவர் காலித்துக்கு அறிவுரைகள் சொல்லியும் அவர் கேட்கவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக காலித்துக்கும், குரேஷிக்கும் இடையே இது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் ஞாயிறன்று காலித் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது,இறைச்சிக் கடைகளில் பயன்படுத்தும் கத்தியால் காலித்தின் வலது கையை மணிக்கட்டுக்கு சற்று மேலாக குரேஷி துண்டித்தார். பின்னர் அங்கிருந்து தப்பி விட்டார்.

காலித்தின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தார் விரைந்து வந்து அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் திங்களன்று குரேஷியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

துண்டிக்கப்பட்ட காலித்தின் கையை இனி ஒன்று சேர்க்க வாய்ப்பில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.