2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தான் துவக்கிய கட்சியிலிருந்தே ராஜிநாமா செய்த சூப்பர் ஸ்டார் நடிகர்! 

விரைவில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள சூழ்நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் உபேந்திரா தான் துவக்கிய கட்சியிலிருந்தே ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:25 pm

IANS

பெங்களூரு: விரைவில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள சூழ்நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் உபேந்திரா தான் துவக்கிய கட்சியிலிருந்தே ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் உபேந்திரா. சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதியன்று, 'கர்நாடகா பிரக்ஞன் ஜனதா கட்சி' என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார். அப்பொழுது அவர் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் வாக்குறுதிகளைக் கொடுக்கிறாரகள். ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் விரைவில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள சூழ்நிலையில், உபேந்திரா தான் துவக்கிய கட்சியிலிருந்தே ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது:

என்னுடைய ராஜிநாமாவை கர்நாடகா பிரக்ஞன் ஜனதா கட்சிக்கு அனுப்பி வைத்து விட்டேன். தேர்தல் ஆணையத்தில் விரைவில் என்னுடைய புதிய கட்சியான 'ப்ரஜாக்கீயா' கட்சியினை பதிவு செய்வேன். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிடுவேன்.     

நான் அரசியலுக்கு வந்ததன் மூலம் பணம் புகழ் சம்பாதிப்பதை விட அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதே எனது நோக்கம்.

கட்சி எதற்காகத் துவக்கப்பட்டதோ அதற்கு மாறாக செயல்பட்டு சிலர் கட்சியில் இருந்து விலகி விட்டனர். கட்சி நிர்வாகிகள் தேர்வு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் கட்சித் தொண்டர்களுக்குத் திருப்தியில்லை. 

விரைவில் துவக்கப்பபட உள்ள 'ப்ரஜாக்கீயா' கட்சியானது வெளிப்படையான நிர்வாகம், சுகாதாரம்,கல்வி மற்றும் பொதுமக்கள் நலனில் கவனம் செலுத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.