குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

3 மாநிலங்களிலும் பாஜக வரலாறு படைக்கக் காத்திருக்கிறது: யோகி ஆதித்யநாத்

3 மாநில தேர்தல் முடிவில் பாஜக வரலாறு படைக்க காத்திருப்பதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:23 pm

Raghavendran

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ், பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

அதிலும் திரிபுரா மற்றும் நாகாலந்து மாநிலங்களில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறது. இதனால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதுகுறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

திரிபுராவில் பாஜக வரலாறு படைக்க காத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். மேகாலயாவிலும் பாஜக-வின் இந்நிலை பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய இந்திய தேர்தல் வரலாற்றில் முக்கியமான நாளாக அமைந்துள்ளது என்றார். 

பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ், மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்துள்ளனர். இந்த 3 மாநிலங்களிலும் உள்ள பாஜக கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.