பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அனைத்து கட்சிக் கூட்டம் சுமூகமாக நடைபெற்றது: மத்திய அமைச்சர் அனந்த் குமார் தகவல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டம் சுமூகமாக நடைபெற்றதாக மத்திய அமைச்சர் அனந்த் குமார், செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :17 ஜூலை 2018, 12:26 pm

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டம் சுமூகமாக நடைபெற்றதாக மத்திய அமைச்சர் அனந்த் குமார், செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ஆம் தேதி வரை 18 நாட்கள் நடைபெறுகிறது. இதுதொடர்பான அனைத்து கட்சிக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், விஜய் கோயல், காங்கிரஸ் தலைவர்கள் அனந்த் ஷர்மா, குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த உதவுமாறு மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அவை அனைத்தும் கூட்டத் தொடரில் விவாதிக்கவும், அதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அனந்த் குமார் கூறினார்.

மேலும், இந்த கூட்டம் சமூகமாக நடைபெற்றதாகவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளிடமும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு, அனைத்து கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அனந்த் குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கும் முத்தலாக், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான அரசியலமைப்பு அந்தஸ்து, திருநங்கைகளுக்கான பாதுகாப்புச் சட்டம், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவள்ளது. மேலும் பிகார், ஆந்திர மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்து விவகாரம், நீட், ஒரே நேரத்தில் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.