மாநிலங்களவையில் வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் 22 மொழிகளில் பேச முதன்முறையாக அனுமதி வழங்கி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, புதன்கிழமை அறிவித்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அனைவரையும் தங்களின் தாய்மொழியில் பேசுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். தாய்மொழியில் உரையாடும்போது ஒருவரின் சிந்தனை மேம்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடரில் இந்திய அரசியலமைப்பு பிரிவு 8-ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் பேச முதன்முறையாக அனுமதி வழங்கி குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு, புதன்கிழமை அறிவித்தார்.
முன்னதாக, மாநிலங்களவையின் தலைவராக வெங்கய்ய நாயுடு பொறுப்பேற்றபோது, மாநிலங்களவையில் 22 மொழிகளும் பேச அனுமதி வழங்கி நடைவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களின் தாய்மொழியில் பேசும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போதுதான் மாநிலங்களவையில் முதன்முறையாக 22 மொழிகள் பேசப்படவுள்ளன. இதற்காக மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவையில் இந்த 22 மொழிகளில் தற்போது வரை ஆசாமி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 12 மொழிகளுக்கு ஏற்கனவே மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். போதோ, மைதாலி, மணிப்பூரி, மராத்தி மற்றும் நேபாளி ஆகிய 5 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளர்கள் மக்களவையில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதர 5 மொழிகளுக்கு தகுதிவாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநிலங்களவை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


