பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மும்பையில் கன மழை காரணமாக விடுமுறை அறிவித்த டப்பாவாலாக்கள்

மும்பையில் கடந்த ஒரு சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2018, 7:39 am


மும்பை: மும்பையில் கடந்த ஒரு சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் மும்பையில் 200 மிமீ அளவுக்கு மழை பெய்தததால், தண்டவாளப் பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் ரயில் போக்குவரத்தும், சாலைகளில் தேங்கிய மழை நீரால் சாலைப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மழை நீர் வடிந்த பிறகே மெல்ல மெல்ல ரயில் சேவை சீரடைந்து வருகிறது. முக்கியப் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகிறது.

அடுத்த 72 மணி நேரத்துக்கு மும்பையில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக நேற்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, வரும் வியாழக்கிழமை வரை கன மழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குடிநீர் ஆதாரமாக விளங்கும் துள்சி ஏரி நிரம்பி வழிந்து வருகிறது. 

கன மழை மற்றும் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் டப்பாவாலாக்கள் இன்று தங்களது பணிக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

சாலைகளில் நீர் தேங்கியிருப்பதால், வெள்ள நீரில் டப்பாவாலாக்கள் சைக்கிளை மிதித்துக் கொண்டு சென்று உரிய நேரத்தில் டப்பாக்களை வாங்கி வருவது கடினம் என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டதாக மும்பை டப்பாவாலாக்கள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.