மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

காஷ்மீருக்கு ஒரு ஹிந்து முதல்வர் வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி வீசும் புது குண்டு 

காஷ்மீருக்கு ஒரு ஹிந்து முதல்வராக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 9:43 am

புது தில்லி: காஷ்மீருக்கு ஒரு ஹிந்து முதல்வராக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் மெஹபூபா முஃப்தி தலைமையில் நடந்து வந்த மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த மாதம் 19-ஆம் தேதி பாஜக வாபஸ் பெற்றது. அதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை மெஹபூபா ராஜிநாமா செய்தார். பின்னர் காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீருக்கு ஒரு ஹிந்து முதல்வராக வேண்டும் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஏ.ஏன்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

காஷ்மீருக்கு ஒரு ஹிந்து முதல்வராக வேண்டும். மக்கள் ஜனநாயக கட்சி ஒரு ஹிந்து அல்லது சீக்கிய உறுப்பினரை முன்னிறுத்தினால் நாங்கள் அவரை முதல்வராக்குவோம்.

காஷ்மீருக்கு ஒரு இஸ்லாமியர்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று மறைந்த பிரதமர் நேரு கொண்டு வந்த வழக்கத்தினை பொறுத்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.