கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மோசடியாளர்களுக்கு வரம்பை மீறி கடன் கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் கைது

மோசடியாளர்கள் என ஆர்பிஐ முத்திரைக் குத்திய பிறகும் அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜனவரி 2024, 4:09 pm

ANI

மோசடியாளர்கள் என ஆர்பிஐ முத்திரைக் குத்திய பிறகும் அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத மொத்தத் தொகை ரூ.2,654 கோடியாகும்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த சிபிஐ, கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு சோதனைகளை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகளை கைது செய்ததோடு, இவர்கள் மோசடியாளர்கள் என ஆர்பிஐ அறிவித்த பிறகும், உச்ச வரம்பையும் தாண்டி தங்களது பரிந்துரையின் பேரில் அளவுக்கு அதிகமாக கடன் கொடுத்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளை சிபிஐ நேற்று இரவு கைது செய்துள்ளது.

வங்கி விதிகளை மீறி இவர்கள் கடன் கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே சிபிஐ கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.