மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

ஆட்சி அமைக்க பிடிபி உடன் கூட்டணி சேர வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை: குலாம் நபி ஆசாத்

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்க பிடிபி அல்லது வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி சேர வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை என மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:07 pm

ANI

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்க பிடிபி அல்லது வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி சேர வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு இல்லை என மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்த கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கலந்துகொண்டார். மேலும் ஜம்மு-காஷ்மீர் பொறுப்பாளர் அம்பிகா சோனி, மாநிலத் தலைவர் ஜி.ஏ.மிர் ஆகியோரும் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீரில் பிடிபி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டிய எந்த நிர்பந்தமும் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. அதுபோன்ற ஒரு கேள்விக்கே இங்கு இடமில்லை என்றார்.

தற்போது ஆளுநர் ஆட்சி நடைபெற்று வரும் அம்மாநிலத்தில், தனிப்பெரும் கட்சியாக 28 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பிடிபி முதலிடத்தில் உள்ளது. பாஜக-வுக்கு 25 உறுப்பினர்கள் உள்ளனர். தேசிய காங்கிரஸுக்கு 15 மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு 12 பேரவை உறுப்பினர்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.