2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்: மத்திய அரசு மீது பாய்ந்த முன்னாள் அமைச்சர்! 

ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய அரசு மீது காங்கிரசினைச் சேர்ந்த  முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:06 pm

IANS

சென்னை: ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய அரசு மீது காங்கிரசினைச் சேர்ந்த  முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் அரசில் வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சராகப் பணிபுரிந்தவர் ஜெய்ராம் ரமேஷ். இவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆதார் அட்டை திட்டத்தினை செயல்படுத்திவரும் விதத்தினைக் கடுமையாக விமர்சிததுள்ளார்.  அப்பொழுது அவர் கூறியதாவது:

ஆதார் என்பது மிக மோசமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறந்த யோசனையாகும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முதலில் கொண்டு வந்த ஆதார் திட்டமானது சமூக நலத்திட்டங்களின் பயன்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாக மட்டுமே திட்டமிடப்பட்டது.  இதனை அடிப்படையாக வைத்து இத்தகைய சமூக நலத்திட்டங்களில் நிலவும் மோசடிகளை ஒழிக்கலாம் என்றும், போலி பயனாளர்களை களையெடுக்கலாம் என்றும் திட்டமிட்டோம்.

ஆனால் ஆதார் அட்டை என்பது தற்பொழுது விமான பயணச்சீட்டுகள் வாங்கவும், வங்கிக் கணக்குகள் துவங்கவும் மற்றும் அலைபேசி இணைப்புகள் வைத்திருக்கவும் தேவைப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் முட்டாள்தனமானது.

ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் சிலர் ரேஷன் பொருட்களை பெற முடியவில்லை; சிலர் முதியோர் ஓய்வூதியம் பெற இயலவில்லை. ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதாரானது மக்களை சாகத் தூண்டுகிறது.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.