புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

சிறைவாசிகளுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் இடையே நடக்கவுள்ள  வித்தியாசமான கால்பந்து போட்டி!

இந்தியாவின் புகழ்பெற்ற திஹார் சிறையில் சிறைவாசிகளுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் இடையே  வித்தியாசமான கால்பந்து போட்டி ஒன்று நடக்கவுள்ளது.

News image
Updated On :26 ஜனவரி 2018, 12:35 pm

புதுதில்லி: இந்தியாவின் புகழ்பெற்ற திஹார் சிறையில் சிறைவாசிகளுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் இடையே  வித்தியாசமான கால்பந்து போட்டி ஒன்று நடக்கவுள்ளது.

தில்லியில் உள்ள திஹார் சிறை இந்தியாவின் புகழ்பெற்ற சிறைச்சாலைகளில் ஒன்று. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த சிறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திஹார் சிறைவாசிகளுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் இடையே  வித்தியாசமான கால்பந்து போட்டி ஒன்றை,ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்த சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மத்திய விளையாட்டுத்துறையின் "கேலோ இந்தியா அபியான்" திட்டத்தின் கீழ் நடத்தப்பட உள்ள இந்த போட்டிகான் ஏற்பாடுகளை தில்லி கால்பந்துக் கழகம் சேர்ந்து செய்துள்ளது.

"சத்பவன கண்காட்சி கால்பந்து போட்டி" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டியானது ஒரு முன்மாதிரியாக அமைவதுடன், சிறைவாசிகள் அவர்தம் குடும்பங்களுடன் வலிமையான பிணைப்பினை உருவாக்கிக் கொள்ளவும், விளையாட்டின் மூலம் சிறப்பான தகவல் தொடர்புக்கும் உதவும் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.