2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சட்டப்பேரவையில் ஒளிபரப்பான ஆளுநர் உரையின் குஜராத் மொழிபெயர்ப்பு: மன்னிப்பு கோரினார் மஹாராஷ்டிரா முதல்வர்! 

திங்களன்று துவங்கிய மஹாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர் உரையின் குஜராத் மொழிபெயர்ப்பு ஒளிபரப்பான விவகாரத்தில் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் மன்னிப்பு கோரினார்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:20 pm

IANS

மும்பை: திங்களன்று துவங்கிய மஹாராஷ்டிரா சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர் உரையின் குஜராத் மொழிபெயர்ப்பு ஒளிபரப்பான விவகாரத்தில் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் மன்னிப்பு கோரினார்

மஹாராஷ்டிரா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்களன்று துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் சி.வி.ராவின் உரையுடன் கூட்டம் துவங்கியது. ஆளுநர் சி.வி.ராவ் எழுந்து நின்று உரையாற்றத் துவங்கிய சில நிமிடங்களிலேயே சட்டப்பேரவை உறுப்பினர்களின் காதுகளில் பொருத்தப்பட்டிருந்த ஹெட்போனில், ஆளுநர் உரையின் குஜராத் மொழிபெயர்ப்பு ஒளிபரப்பாகத் துவங்கியது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அத்துடன் உடனடியாக மராத்தி மொழிபெயர்ப்பு உரையினை  ஒளிபரப்ப வேண்டும் என்று கூச்சலிட்டனர். அத்துடன் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்யும் பொருட்டு, ஆளுநர் உரையினை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சபை கூடிய பொழுது மாநில கல்வி அமைச்சரான வினோத் தவ்டே, குஜராத் மொழிபெயர்ப்பு உரை ஒளிபரப்பாகத் துவங்கியதும் தானே நேரடியாக சபை கட்டுப்பாடு அறைக்குச் சென்று சோதித்தாகக் கூறினார். பின்னர் ஆளுநர் உரையின் மராத்தி மொழிபெயரப்பினை அவர் வாசித்தார்.

பின்னர் பேசிய மாநில முதல்வர் தேவேந்திர பட்நவீஸ், 'இது மிகப் பெரிய தவறு; கவனிக்க வேண்டிய விஷயமும் கூட, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி, காரணமானவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை நான் கேட்டுக் கொள்கிறேன். முடிந்தால் அவர்கள் மீது திங்கள் அன்று மாலையே நடவடிக்கை எடுக்கப்படும். தவறுக்காக சபையில் என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறேன்.' என்று தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.