2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தலித் பேராசிரியரை முகநூலில் தரக்குறைவாக விமர்சனம்: ஆய்வு மாணவர் பல்கலையிலிருந்து நீக்கம்! 

தலித் பேராசிரியர் ஒருவரை முகநூலில் தரக்குறைவாக  விமர்சனம் செய்த ஆய்வு மாணவரை, ஒரு வருடத்திற்கு  பல்கலையிலிருந்து நீக்கம் செய்து ஹைதாராபாத் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:08 pm

IANS

ஹைதராபாத்: தலித் பேராசிரியர் ஒருவரை முகநூலில் தரக்குறைவாக  விமர்சனம் செய்த ஆய்வு மாணவரை, ஒரு வருடத்திற்கு  பல்கலையிலிருந்து நீக்கம் செய்து ஹைதாராபாத் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. 

ஹைதாராபாத் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்  லக்ஷ்மிநாராயணா. இதே பல்கலையில் வரலாற்றுத் துறையில் ஆய்வு மாணவராக இருப்பவர் கல்ராம் பல்சானியா. இவர் வலதுசாரி இயக்கமான ஆர்.எஸ்.எஸின் ஆதரவு பெற்ற மாணவர் இயக்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் பல்கலை தலைவராகவும் இருக்கிறார்.

இந்நிலையில்  பேராசிரியர் லக்ஷ்மிநாராயணா கடந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக தேர்வு ஒன்றின் பொழுது, 'கல்வித்துறையில் காவி மயம்' என்பது குறித்து கேள்வி ஒன்றைத் தாங்கிய கேள்வித் தாளை வடிவமைத்திருந்தார். இதன் காரணமாக பல்சானியா அவர் மீது ஆத்திரத்துடன் இருந்துள்ளார்.

அதன் வெளிப்பாடாக கடந்த நவம்பர் மாதம் பல்சானியா  தனது முகநூல் பக்கத்தில் லக்ஷ்மிநாராயணாவை கடுமையாக  விமர்சித்திருந்தார். அவர் மற்றவர்களை மிரட்டியும் அச்சுறுத்தியும் பேராசிரியர் பதவிபெற்றுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த பதிவானது ஜனவரி மாத இறுதியில் மீண்டும் அனைவரது பார்வைக்கும் வந்தது. இதனைத் தொடர்ந்து பல்கலை வட்டாரத்தில் சர்ச்சை உண்டானது.

பேராசிரியர் லக்ஷ்மிநாராயணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் அப்பாராவ் மற்றும் செனட் உறுப்பினர்களிடம் இது தொடர்பாக  புகார் அளித்தார். வேறு சில தலித் மாணவர் ஆதரவு இயக்கங்களும் பல்சானியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தின. இதன் தொடர்ச்சியாக ஓய்வு பெற்ற நீதிபதி, காவல்துறை உயர் அதிகாரி மற்றும் ஐந்து பேராசிரியர்கள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

குழு விசாரணையின் முடிவில் பேராசிரியர் லக்ஷ்மிநாராயணாவை அவமதிக்கும் விதமாக பல்சானியா நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பல்கலைக்கழகத்தினைச் சேர்நத யாரையும் இவ்வாறு  நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குழு தெரிவித்துள்ளது.

இறுதியில் இந்த செயலுக்குத் தண்டனையாக பல்சானியாவை ஒரு வருடத்திற்கு  பல்கலையிலிருந்து நீக்கம் செய்து ஹைதாராபாத் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.30000 அபாரதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.