டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

முத்தலாக் மசோதா மக்களவையில் மீண்டும் அறிமுகம் 

இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமை தொடர்பான முத்தலாக் மசோதா மக்களவையில் மீண்டும் திங்களன்று அறிமுகம் செய்யப்பட்டது.  

News image
Updated On :17 டிசம்பர் 2018, 9:54 am

புது தில்லி: இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமை தொடர்பான முத்தலாக் மசோதா மக்களவையில் மீண்டும் திங்களன்று அறிமுகம் செய்யப்பட்டது.    

முத்தலாக்கை தடை செய்யும், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டத்திற்கு  மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. இச்சட்டத்தின்படி தொடர்ந்து மூன்று முறை தலாக் கூறி மனைவி விவாகரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். இது தவிர கடிதம், மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட மின்னணு வழிகள் மூலம் முத்தலாக் கூறுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். 

அதே நேரத்தில் இந்த சட்டத்தில் ஜாமீன் வழங்கும் பிரிவைச் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், அந்தப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க முடியும்.

முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்ட மசோதா, மக்களவையில் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேறிவிட்டது. அதே நேரத்தில் மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.

மாநிலங்களவையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், திருத்தங்களுடன் கூடிய மசோதாவை மீண்டும் மக்களைவைக்கு அனுப்பப்பட்டு அங்கு நிறைவேற்றப்படும்.

இந்நிலையில் இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமை தொடர்பான முத்தலாக் மசோதா மக்களவையில் மீண்டும் திங்களன்று அறிமுகம் செய்யப்பட்டது. 

ரஃபேல் விவகாரம், மேகேதாட்டு மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ், அதிமுக மற்றும் தெலுங்கு தேச உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மசோதாவை அறிமுகம் செய்தார்.

காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கூறிய கருத்துக்களுக்கு, ரவிசங்கர் பிரசாத் பதிலளித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.