கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ஐக்கிய அரபு அமீரகம் ரூ 700 கோடி தருவதாகக் கூறவே இல்லை: முதல்வர் பினராயி விஜயனை நெருக்கும் கேரளா பாஜக 

ஐக்கிய அரபு அமீரகம் ரூ 700 கோடி தருவதாகக் கூறவே இல்லை; இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டும் என்று கேரள பாஜக தலைமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:35 pm

IANS

திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு அமீரகம் ரூ 700 கோடி தருவதாகக் கூறவே இல்லை; இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டும் என்று கேரள பாஜக தலைமை தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பில் இதுவரை 680 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் கேரள அரசு கோரிக்கை விடுக்காமலே, கேரள மாநிலத்தின் நிலையைப் பார்த்து, ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியுதவியை வழங்க தயாராக இருப்பதாக மாநில முதல்வர் பினராயி விஜயன் கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார். அப்பொழுது இந்தத் தகவலை தமக்கு கேரளவைச் சேர்ந்தவரும், மத்திய கிழக்கின் முக்கியமான தொழில் அதிபரான யூசுப் அலி தெரிவித்தார் என்றும் கூறினார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் ரூ 700 கோடி தருவதாகக் கூறவே இல்லை; இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டும் என்று கேரள பாஜக தலைமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை வெள்ளியன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

கேரளாவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ 700 கோடி தருவதாக ஐக்கிய அரபு அமீரகம் கூறவே இல்லை. நிலைமை இப்படியிருக்க இதுதொடர்பாக மாநில முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டும். எங்கிருந்து இந்தத் தகவலை அவர் பெற்றார் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவது தொடர்பாக தயக்கங்களை வெளியிட்டவுடன் மத்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் அவதூறு பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. மோடியின் அரசு தவிர வேறு எந்த மத்திய அரசும் மாநிலத்திற்கு இந்த அளவுக்கு நிதி ஒதுக்கியதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.