எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கேரள வெள்ள பாதிப்பு: நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட அம்மாநில  அரசின் 'அடடே' ஐடியா 

கனமழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கேரளாவில், நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட அம்மாநில அரசு வித்தியாசமான ஐடியா ஒன்றினை செயல்படுத்த இருக்கிறது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:35 pm

IANS

திருவனந்தபுரம்: கனமழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கேரளாவில், நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட அம்மாநில அரசு வித்தியாசமான ஐடியா ஒன்றினை செயல்படுத்த இருக்கிறது.

மே மாதம் 29-ஆம் தேதி துவங்கியதிலிருந்து தொடர்ந்து பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பில் இதுவரை 680 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கேரளாவில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட அம்மாநில அரசு வித்தியாசமான ஐடியா ஒன்றினை செயல்படுத்த இருக்கிறது.

இதுதொடர்பாக மாநில வருவாய்த் துறை அமைச்சர் தாமஸ் ஐசாக் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

வெள்ள நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட 'சிறப்பு லாட்டரி' ஒன்றை விற்பனை செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

அஷ்வாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த லாட்டரியானது ரூ. 250-க்கு விற்பனை செய்யப்பட்ட உள்ளது. எத்தனை வரிசைகள் அச்சிடப்பட்ட உள்ளனவோ, அத்தனைக்கும் ரூ 1 லட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது. அக்டோபர் 3-ஆம் தேதி குலுக்கல் நடைபெறவுள்ள இந்த லாட்டரிச் சீட்டு விற்பனையின் மூலம் கிடைக்கக் கூடிய மொத்தத் தொகையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அனைத்து செலவினங்களும் போக அரசுக்கு கிடைக்கக் கூடிய ரூ 100 கோடியே விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட உள்ளது என்று மாநில வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.