பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

கேரள வெள்ள பாதிப்பு: நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட அம்மாநில  அரசின் 'அடடே' ஐடியா 

கனமழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கேரளாவில், நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட அம்மாநில அரசு வித்தியாசமான ஐடியா ஒன்றினை செயல்படுத்த இருக்கிறது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2018, 10:53 am

திருவனந்தபுரம்: கனமழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கேரளாவில், நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட அம்மாநில அரசு வித்தியாசமான ஐடியா ஒன்றினை செயல்படுத்த இருக்கிறது.

மே மாதம் 29-ஆம் தேதி துவங்கியதிலிருந்து தொடர்ந்து பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பில் இதுவரை 680 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கேரளாவில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட அம்மாநில அரசு வித்தியாசமான ஐடியா ஒன்றினை செயல்படுத்த இருக்கிறது.

இதுதொடர்பாக மாநில வருவாய்த் துறை அமைச்சர் தாமஸ் ஐசாக் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:

வெள்ள நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 100 கோடி திரட்ட 'சிறப்பு லாட்டரி' ஒன்றை விற்பனை செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

அஷ்வாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த லாட்டரியானது ரூ. 250-க்கு விற்பனை செய்யப்பட்ட உள்ளது. எத்தனை வரிசைகள் அச்சிடப்பட்ட உள்ளனவோ, அத்தனைக்கும் ரூ 1 லட்சம் பரிசாக வழங்கப்பட உள்ளது. அக்டோபர் 3-ஆம் தேதி குலுக்கல் நடைபெறவுள்ள இந்த லாட்டரிச் சீட்டு விற்பனையின் மூலம் கிடைக்கக் கூடிய மொத்தத் தொகையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அனைத்து செலவினங்களும் போக அரசுக்கு கிடைக்கக் கூடிய ரூ 100 கோடியே விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட உள்ளது என்று மாநில வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.