கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

இங்கிலாந்தில் நீரவ் மோடி; உறுதி செய்தது இன்டர்போல்: நாடு கடத்தக் கோரும் சி.பி.ஐ 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13500 கோடி மோசடி செய்து விட்டு இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பதை இன்டர்போல் உறுதி செய்துள்ளது

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:33 pm

IANS

புது தில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13500 கோடி மோசடி செய்து விட்டு இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பதை இன்டர்போல் உறுதி செய்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றில் ரூ 13500 கோடி மோசடி செய்து விட்டு, ரகசியமாக இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்று விட்டார். அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பதுங்கியிருப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அங்கிருந்து இங்கிலாந்துக்கு வந்து, லண்டனில் அவரது கடை ஒன்றில் தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.  

அதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரில் சர்வதேச காவல்துறையான 'இன்டர்போல்' சார்பில் நீரவ் மோடிக்கு எதிராக இருமுறை 'ரெட் கார்னர்' நோட்டீஸ் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பதை இன்டர்போல் உறுதி செய்துள்ளது.   இங்கிலாந்து அதிகாரிகள் அனுப்பியுள்ள மின்னஞ்சல் மூலம் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நீரவ் மோடியினை நாடு கடத்த இங்கிலாந்திடம் கோரிக்கை வைக்குமாறு மத்திய வெளியுறவுத் துறைக்கு சிபிஐ வேண்டுகோள் வைத்துள்ளது. 

இந்த கோரிக்கையானது மத்திய வெளியுறவுத் துறையின் வாயிலாக இங்கிலாந்து அதிகாரிகளுக்கு மேல்நடவடிக்கை கோரி அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.