இந்த வழக்கில் 226 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 411 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, ஹைதராபாத் என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே. ரவீந்தர் ரெட்டி தனது தீர்ப்பை திங்கள்கிழமை வெளியிட்டார். அப்போது அவர், 'சுவாமி அஸிமானந்த், பரத் மோகன்லால் ரதேஷ்வர், ராஜேந்திர சௌதரி, தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா ஆகிய 5 பேருக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் அரசு தரப்பு தோல்வியடைந்து விட்டது; ஆதலால், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறேன்' என்றார். இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் பேசியபோது, அஸிமானந்த் தரப்பு வழக்குரைஞர் ஜே.பி. ஷர்மா தெரிவித்தார்.