தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தங்கத்தை கூழாக்கும் கடத்தல்காரர்கள்: விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு கடும் சவால்

வெளிநாடுகளில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக தங்கம் கடத்துவோர் மேற்கொள்ளும் புதிய யுக்திகள், கேரள விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு கடும் சவாலாக உள்ளன.

News image
Updated On :3 ஏப்ரல் 2018, 9:25 am


கொச்சி: வெளிநாடுகளில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக தங்கம் கடத்துவோர் மேற்கொள்ளும் புதிய யுக்திகள், கேரள விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு கடும் சவாலாக உள்ளன.

சமீபத்தில் அப்படி ஒரு சவாலை சந்தித்த சுங்கத் துறை அதிகாரிகள், அந்த மஞ்சள் உலோகம், பேஸ்ட் வடிவில் பற்பசை பேக்குக்குள் வைத்துக் கொண்டு வரப்பட்டதைப் பார்த்து அதிர்ந்து போயினர்.

இதுபோன்று தங்கத்தை கூழாக்கிக் கொண்டு வரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தங்கக் கூழை, விமான நிலையத்தில் இருக்கும் மெட்டல் டிடெக்டர்கள் கண்டுபிடிக்க முடியாமல் போவதுதான் சோகம்.

நெடும்பசேரி விமான நிலையத்தில் தங்கக் கூழை பெல்டில் மறைத்துக் கொண்டு வந்த பயணி ஒருவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து 851 கிராம் எடையுள்ள தங்கக் கூழ் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 26.3 லட்சம்.

அதாவது, தங்கக் கூழை ஒரு பட்டைபோல மாற்றி, அதனை பேக் செய்து பயணி பெல்ட்டாகக் கட்டியிருந்தது சுங்கத் துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்தது. தங்கத்தை ரசாயனத்துடன் கலந்து கூழாக்குகிறார்கள். இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

பொதுவாக இதுபோன்ற தங்கக் கூழ்களை மெட்டல் டிடெக்டர்கள் கண்டுபிடிப்பதில்லை என்பதால், சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினருக்கு வரும் தகவல்களின் அடிப்படையில் சிலரைப் பிடித்து தனித்தனியாக விசாரணை நடத்தி, சோதித்தே கண்டறிந்து வருகிறோம் என்று சுங்கத் துறை ஆணையர் சுமித் குமார் கூறியுள்ளார்.

உள்ளாடைகள், ஷாக்ஸ் போன்றவற்றில் கூட இதுபோன்று தங்கத்தை மறைத்துக் கொண்டு வருகிறார்கள். எலக்ட்ரானிக் பொருட்களுக்குள் இதுபோன்ற தங்கக் கூழ் எளிதாக ஒளிந்து கொள்ளுகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு யுக்தியை கையாள்கிறார்கள். அதற்கேற்ப சுங்கத் துறை அதிகாரிகளும் அவற்றை கண்டறிந்து, கடத்தல் திட்டத்தை முறியடிக்கிறார்கள் என்றும் சுமித் கூறினார்.

இதுபோன்ற கடத்தல் தங்கம் குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு, பிடிபடும் தங்கத்தின் சந்தை மதிப்பில் 20 முதல் 30 சதவீதம் அளவுக்கு பரிசாக அளிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாகக் கூறினார்.

2017-18ம் நிதியாண்டில் மட்டும் கேரளாவில் 87 கிலோ  அதாவது 26.97 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.