காஷ்மீர்: காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் உள்ள ஏரி ஒன்றை, குப்பை பொறுக்கும் சிறுவன் ஒருவன் தனி ஆளாக வருடத்திற்கு 12 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வடக்கு காஷ்மீரின் பந்திபுரா மாவட்டத்தில் உள்ளது வூலர் ஏரி. இந்த ஏரியில் கிடக்கும் குப்பைகளை பொறுக்கி விற்று வாழ்ந்து வருபவன் பிலால் தர் என்னும் இளைஞன். இவனைப் போன்று குப்பை பொறுக்குபவராக வாழ்ந்து வந்த இவனது தந்தை, கடந்த 2003-ஆம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார்.
தந்தையின் திடீர் மரணத்திற்குப் பிறகு, தனது 14-ஆம் வயதில் தாய் மற்றும் இரண்டு தங்கைகளைக் காப்பாற்றும் பொருட்டு பிலால் முழுமையாக இந்த தொழிலில் ஈடுபடத் தொடங்கினான். வூலர் ஏரியில் கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளை அவன் நீக்கி வந்தான். அப்பொழுது ஊதியமாக ஒரு நாளைக்கு அவனுக்கு ரூபாய் 150 முதல் 200 வரை கிடைத்து வந்தது.
அதன் பின்னர் தனக்கு வருமானம் தரும் வூலர் ஏரியினை சுத்தம் செய்வதை தன்னுடைய பணியாக பிலால் ஏற்றுக் கொண்டான். அதன்படி தற்பொழுது வருடத்திற்கு 12 ஆயிரம் கிலோ குப்பைகளை பிலால் அகற்றி சுத்தப்படுத்தி வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
அவனது சலியா முயற்சிகளின் காரணமாக தற்பொழுது பிலால் ஸ்ரீநகர் நகராட்சி ஆணையத்தின் விளமபரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு என தனியான சீருடையும் வாகனமும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் அவன் பல்வேறு மக்களை சந்தித்து சுத்தத்தின் தேவை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தலாம்.
வூலர் ஏரிக்கு இவனது சேவைகளை பாராட்டும் விதமாக தனியான ஆவணப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.அது பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறது பிரதமர் மோடி நிகழத்தும் மாதாந்திர வானொலி உரையான 'மன் கி பாத்' நிகழச்சியில் கூட நேற்று அவர் பிலால் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தனது குடும்பத்திற்கு என நிலையான வருமானம் இல்லாத காரணத்தால் சரியான ஒரு வேலை வழங்குமாறு பிலால் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் வைத்துள்ளான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


