இது தொடர்பாக அந்தப் பகுதிகளில் நடத்தப்பட்ட விசாரணையில் படேரு தாலுகாவினைச் சேர்ந்த உருகொண்டா குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் கூறும் பொழுது, 'கஞ்சா கடத்தல் மற்றும் அது தொடர்பான பணிகள் என்பது அந்தப்பகுதிகளில் உள்ள ஆண்களுக்கு மட்டும் அல்ல; பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் கூட வருமானம் ஈட்டும் ஒரு தொழிலாக விளங்குகிறது. அரசாங்கம் எவ்வளவோ மாற்று மற்றும் வளர்ச்சித் திட்டங்களைப் பற்றிப் பேசினாலும், அதில் ஒரு சில மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. வேலையின்மையும் அரசின் ஆதரவு இல்லாததுமே இத்தகைய கஞ்சா கடத்தல் கும்பல்க ளை நோக்கி மக்களைத் தள்ளுகிறது' என்று தெரிவித்தார்.